widget

Saturday

சித்தம் கலங்கிய 
பித்தன் உலரர்கலாய் 

நித்தம் எந்தன் இதயம் 
உந்தன் பெயர் சொல்லியே 

இரத்தம் சிந்துகிறது...!

Tuesday

வலிகள் கூட சுகமானதுதான் 
நீ தருகின்றபோது...

பிரிவுகள் கூட சுகமானதுதான் 
உன் நினைவுகள் உடனிருக்கும் போது ...

அழுகை கூட சுகமானதுதான் 
உனக்காய்  நான் அழும்போது...

வார்த்தையாய் காதலைச் சொல்வதில் 
உடன்பாடில்லை  எனக்கு...

வாழ்க்கையாய் அதை 
வாழ்ந்து  காட்டுகிறேன்...

ஒரு வாய்ப்பு கொடேன்..!

Thursday




வாய்  பேச மறுக்கிறேன் -உன் விழி பேசும் பொழுதுகளில்...

விண் தாண்டி பறக்கிறேன் -உன் விரல் தொடும் தருணங்களில்...!

Tuesday

தரையில்
 உதிர்ந்த
 மலராய் 
என்- வாழ்க்கை 

மனதில் 
பதிந்த 
வடுவாய் 
உன்- வாசம்...!

Sunday

பூத்தாலும் வாசம் வீசாது
வான் நட்சத்திரங்கள்
அதுபோலவே என்  காதலும்
இதயத்தில் பூத்தும் வாழ்க்கை
என்னும் வாசம் வீசவில்லை ....

எந்தன்  இதயத்தின்
துடிப்பு மட்டும் ஆறுதல்
சொன்னது கலங்காதே
மறு ஜென்மத்தில் சந்திக்கலாம் 

அப்போது சேர்ந்து வாழலாம் 
என்று ....

நடைமுறையில் இல்லாத போதும்
நம்பிக்கையோடு விடைபெற்றேன்
ஆனால் உள்ளம் மட்டும் எப்போதும்
உன் நினைவுகளுடனேயே ...!

Saturday


பார்க்கும் 
இடத்தில்
எல்லாம் 

"நீயே "....

தெரிகிறாய் 
கண்களை 
மூடிக்கொண்டால் 

"நீ "....

கனவாக 
வருகிறாய்...!

வெள்ளிகள் பூத்திருந்த 
வானிலே...
விழிகளோ  தேடுகிறது 
உன்னையே...

எந்த விண்மீனை 
உனக்காக பறிக்கலாம் 
என்று  எண்ணியிருந்தவேளை
விண்ணை விட்டு  ஓடும் 
விடிவெள்ளியொன்று கண்டேன் 

அழகிய விண்மீனே
ஒரு நிமிடம் நில்லு...!

எனக்காக.....
ஒரு உதவி செய்வாயா 

என்னவளை கண்டால் -நான் 
அவளை நினைத்தேன்-என்று 
  சாட்சிசொல்....!

சல சல வென 
இலைகள்...
தலையாட்டுகிறதே


விடு விடு  என
தென்றல்....
விளையாடுகிறதே


காற்றுக்கும், இலைக்கும்
அப்படி என்ன காதல்...!
 சுவாசம் தந்து
இதயம் பறித்து சென்ற
இனியவளே!


அறிவாயோ ஒரு சேதி...


உன் நினைவுகள்
என்னும் ஆகுதிக்குள்
வீழ்த்து துடிக்கும்
தருணங்களில்


என் கண்ணீரின்
ஆழம் அறிந்த
என் "பேனா"


என் உணர்வுகளை
தன் உதிரமாக்கி
கவிதை என்னும்
காவியம் படைக்கின்றது ...!
 மேகத்தின் தேடல்கள் 
வானத்தில் முடிந்தாலும்,
நேசத்தின் தேடல்கள்
முடியாதது..!
 
மாதங்கள் மாறட்டும். 
வருஷங்கள் தீரட்டும்.

விதி போட்ட 

கோலங்கள்....
அழியாதது!

வழியெல்லாம் பூப்போல பூத்திருப்பேன்.
உன் வருகைக்கு எந்நாளும் காத்திருப்பேன்.

பூத்திருக்கும் இதயத்தில் 
காத்திருக்கும்  என் கனவுகள்....

அன்பு கொண்ட என் நெஞ்சத்தில்
உன் நேசத்தின் நினைவுகள்...

என்றும் அழியாத கல்வெட்டுகள்..!








Friday

சொல்லாத வார்த்தைகளை
சொல்லி சொல்லி பார்ப்பதால்
அள்ளி அள்ளி ஆனந்தம் ....

எண்ணம் தாண்டி வண்ண
வண்ணமாய் கண்ணில் பூத்து
காதில் பேசுகிறது ஊமை
காதலாய் ....

மண்ணில் பூக்கும் செடியாய்
மலரும் பாசம் ஒரு நாள்
சொல்லாமலே உதிர்கிறது

அவள் இன்னொரு சொந்தமாய்
மண்ணில் மறையும்போது
கல்லறை காவியமாய் ...
நித்தம் நித்தம் 
உன்னை நினைத்து 
என் இதயம் 
தீயாய் எரிகிறது...!

அந்த சாம்பலும் 
உன்னைத்தேடி 
காற்றோடு வருகிறது......

அதை தூசு என 
நினைத்து தட்டி விடாதே
அது காலில் விழுந்தாலும் 
கண்ணீர் விடும்...

அதுதான் உண்மைக்காதல்..!

Monday


என்
இரவோடும் 
பகலோடும் 
தொடர்கின்ற 
நினைவிவளோ


என் 
உயிரோடும் 
மனதோடும் 
ஒன்றித்த
உறவிவளோ


உன்னை
நினைக்கையில் 
உள்ளம் 
வருடுதம்மா 


உன்னை 
பிரிகையில் 
நெஞ்சம் 
நொருங்குதம்மா


என் 
தாய் அன்பும் 
தோத்ததுவோ
உன்னிடம் 

தவிப்பினில் 
ஏங்குது 
என்
மனம்!!
உன் ஒருநாள் 
பிரிவில் 
உணர்ந்தேன் 


உன் நினைவுகள் 
என்னதான் 
சுகமெனினும் 


உன் நிஜத்தையே 
விரும்புகிறது 
என் இதயம் -என்று!


Sunday

உன் நினைவுகள் சுமந்த
என் இதயம் என்னை
பார்த்து  கேக்கிறது
 

உன்னை நேசிக்க ஆயிரம் 
உறவுகள் அருகில் 
இருந்தும் 


எதற்காய் ஆயிரம்  மைல்கல்
தாண்டி  வாழும் 
ஒருத்தியை நேசிக்கிறாய் என்று 


அதனிடம் நான் எப்பிடி 
சொல்வேன் 
இதுதான் காதல் என்று!!



Saturday

விரும்பியே ஒரு முறைதான் 
இதயம் துலையும்

வாழ்வோ சாவோ 
உன்னோடுதான் 


நீ -என் காதலை 
ஏற்றுகொண்டாலும் 
ஏற்றுகொள்ள மறுத்தாலும் 

என்றும்  உன்னுடனே என் காதல்!


Friday

உன் இதயத்தில்
நீ விரும்பிய 
உன்னவனாய் 


நான்
ஒரு நிமிடம் வாழ்ந்திருந்தால்


அதுவே என் காதலுக்கு 
கிடைத்த...

மிக சிறந்த பரிசு...!
காதல் ஆணவம் 
என்னில் தோன்றுதே 

பூமி ஓர் கணம்
நின்று  போனதே 

இரவோடு பேசும் நிலவோ -இல்லை 
மழையோடு வீசும் புயலோ 


இது என்ன மாஜம்
தேவலோகம் என் முன் தோன்றுதே..!


இமைகளில் 
தோன்றி  
இதயங்களில்  
மலர்ந்து  

என்றோ 
ஒரு நாள் 
சுகமான சுமையுடன் 


இனிதே நிறைவேறுவது 

காதல்...!
 

என் 
உடலும் 
உள்ளமும்
உள்ளவரை  

உன் 
உன்னத
நினைவுகள் 

என்
இதயகரையில் 
அலை மோதிகொண்டே இருக்கும்..!

Thursday

                   
 மறந்திட்டியா?
                          

காதல் ஒரு போர்
முகம்தானோ
என் மனம்
கேக்குது இங்க

நாணல் கொண்ட
பெண்மைதானோ
சாரலை தூண்டுது
இங்கே 

வான்முகில் மேகங்கள்
பாசுரம் பாட  
என் மன கோயிலில் 
உயிர் என கலந்தது ஏனோ...!



என்னவள் இதழ் விரித்து சிரித்தால்....
தாமரையும் வெக்கித்து தலை குனியும் 

 வாய் திறந்து மொழி பேசுகையில் 
அவள்  குரல் இசை கேட்டு 
வண்ண குயிலும் தலையாட்டும்...


குயில்  இசையும் தோத்ததோ இவளிடம்!






Saturday

உடலை விட்டு உயிர் பிரிந்தாலும்
உன் நினைவுகளை என் நெஞ்சில் சுமந்து
என்றும் உன்னையே காதலிப்பேன்.....!
"நீ"
நிஜங்களாய் தந்த கனவுகள் 
எந்தன் நினைவில் 
உயிராய் - நீளுதே
என் நறுமலர்ப் பூவின் 
ஒருமுகப் பார்வை- என் 
உயிர்வரை தீண்டுதே,       

கார்முகில் மழை, 
வானவில் பிறை
நீல வானமும் நீதான் -என் உயிரே!
                            
பாதை வழி ஆயிரம் பூக்கள் 
என் மனம் சிலிர்த்ததும் -இல்லை                          

தேவதை பூ ஒன்று வந்து..
என் விதி மாத்தியதேனோ!

காதலால் என் மனம் வெந்திடும் -எண்டு
கனவிலும் கற்பனை செய்ததும் இல்லை 

தனிமையே நிலையென ஆனா பின்பு!

உன் நினைவொன்றே நிஜமென -கொண்டு
வெறுமையில் என் துயர் தொடருது -இங்கு!